அதிலாபாத் நகரத்தில் உள்ள இந்த மஹாத்மா காந்தி பார்க் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை வருடம் முழுதும் ஈர்த்தவண்ணம் உள்ளது. அமைதியையும் ஓய்வையும் விரும்புபவர்களுக்கு ஏற்ற ஸ்தலமாக இந்த பூங்கா திகழ்கிறது.
நகர மையத்திலேயே வீற்றுள்ள இந்த பூங்கா நடைப்பயணம் மேற்கொள்ள, உடற்பயிசிகளில் ஈடுபட உகந்த இயற்கைச்சூழலை கொண்டுள்ளது. இங்கு பல வெளிநாட்டு மலர்ச்செடிகள் மற்றும் மரங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.
நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வரும் இந்தப்பூங்காவின் புல் தரைகளில் அமர்ந்தபடியே சுற்றிலும் காணப்படும் பூங்காவின் அழகுச்சூழலை ரசிக்கலாம். அமர்ந்து இளைப்பாற வசதியான இருக்கைகளும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.
நகரத்தின் முதிய தலைமுறையினர் மத்தியில் இந்த மஹாத்மா காந்தி பார்க் பிரசித்தமாக விளங்குகிறது. சக நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரை சந்தித்து அளவளாவ இந்த இடம் ஏற்றதாக இருப்பதே காரணம். இருப்பினும் இரவு 8.30 மணி வரை மட்டுமே இந்த பூங்கா திறந்திருக்கும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.