அடூர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் புத்தென்காவில் பகவதி கோயில் பத்ரகாளி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்தக் கோயில் காளியின் அருளைப்பெற்ற குரம்பாலாவின் பாலப்பல்லில் குடும்பத்தை சேர்ந்த ஒருவரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் பத்ரகாளியின் விக்ரகம் 8 கைகளுடன் பக்தர்களுக்கு காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.அதோடு விநாயகர், யக்ஷி, மூர்த்தி, மருதா,அனமருதா, கண்டகர்ணன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகளையும் நீங்கள் இந்தக் கோயிலில் பார்க்கலாம்.
மேலும் அடூர் நகரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக்கு மிகச் சிறந்த சாட்சியாக விளங்கி வரும் புத்தென்காவில் பகவதி கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.