சில்ரென்’ஸ் பார்க் எனப்படும் இந்த குழந்தைகள் பூங்கா அகர்தலா நகரத்தின் பிரதான பகுதியில் சகுந்தலா ரோட் எனும் சாலையில் அமைந்துள்ளது. குழந்தைகள் விளையாடி மகிழும் பூங்காவாக மட்டுமல்லாமல் கண்காட்சிகள் மற்றும் விழாக்கள் போன்றவற்றுக்கான மைதான வெளியாகவும் இது பயன்படுகிறது.
வருடாந்திர கண்காட்சிகள், சர்வதேச தொழிற்கண்காட்சிகள் போன்றவை இந்த குழந்தைகள் பூங்கா வளாகத்தில் நடைபெறுகின்றன. உடைகள், விவசாயப்பொருட்கள் போன்றவற்றுக்கான விசேஷ சந்தைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுவதுண்டு.
பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் நாட்டார்கலை போன்றவற்றை விளம்பரப்படுத்துவதற்காக திரிபுரா அரசாங்கத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளும் இங்குதான் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
நகரத்திற்குள்ளேயே அமைந்துள்ளதால் இந்த குழந்தைகள் பூங்காவுக்கு விஜயம் செய்வது வெகு சுலபம். பேருந்துகள் மற்றும் டாக்சிகள் மூலமாக பயணிகள் இந்த பூங்கா வளாகத்தை வந்தடையலாம்.
இந்த வழியாக அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதும் போக்குவரத்திற்கு வசதியாக உள்ளது. உங்களுக்கு அதிர்ஷ்டம் நீங்கள் அகர்தலாவிற்கு விஜயம் செய்யும்போது இந்த பூங்காவில் ஏதாவதொரு சர்வதேசக்கண்காட்சி நடைபெறக்கூடும்.