நேரு பார்க் எனப்படும் இந்த பூங்கா தனித்தன்மையான தோற்றத்துடன் அகர்தலா நகரத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது. மாநில அரசாங்கமே இந்த பூங்காவை பராமரித்து நிர்வகித்து வருகிறது.
பலவகையான செடிகள், மலர்ச்செடிகள், மூலிகைச்செடிகள் போன்றவை இந்த நேரு பார்க் பூங்காவில் வளர்க்கப்பட்டிருக்கின்றன. பல அரியவகை வெளிநாட்டு மலர்த்தாவரங்கள் இதர உள்நாட்டு செடிகளோடு கலந்து வளர்ந்திருப்பதை அபூர்வமாக இங்கு காணலாம்.
மாநில அரசாங்கத்தின் சிறப்பான பராமரிப்பில் இந்த பூங்கா அகர்தலா நகரத்திலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரபல்யமடைந்துள்ளது.
மரம், செடி கொடிகள், மலர்கள் மட்டுமல்லாமல் அழகிய தடாகங்கள், நீரூற்றுகள் போன்றவையும் இந்த பூங்காவை அலங்கரிக்கின்றன. அகர்தலா நகரத்தின் சந்தடி மற்றும் பரபரப்புக்கு நடுவே இந்த பூங்காவில் ஒரு மாலைநேர நடைப்பயணம் மனதுக்கு இதத்தை அளிப்பதாக இருக்கக்கூடும்.