அகர்தலா நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த சிபாஹிஜலா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. 18.5 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் பசுமையான தாவரச்செழிப்புக்கும் இயற்கைக்காட்சிகளுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. புலம் பெயர் பறவைகள் அதிக எண்ணிக்கையில் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்கின்றன.
1972ம் வருடம் உருவாக்கப்பட்ட இந்த சிபாஹிஜலா காட்டுயிர் சரணாலயம் காலப்போக்கில் பிரசித்தமான சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.
பலவகை புலம்பெயர் பறவைகளை உள்ளடக்கிய 150 வகை பறவைகள் இந்த சரணாலயத்தில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதி மட்டுமல்லாமல் ஒரு மான்பூங்கா மற்றும் ஏரிகள் போன்றனவும் இந்த சரணாலயத்தில் அடங்கியுள்ளன.
இதன் உள்ளே வசிக்கும் வெவ்வேறு உயிரினங்களை பிரித்தறிவதற்காக அவை ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஊன் உண்ணிகள், குரங்கினங்கள், கால்நடை விலங்குகள், ஊர்வன ஜந்துக்கள் மற்றும் பறவை இனங்கள் என்பவையே அவை.
அபசாரிகா மற்றும் அம்ரித் சாகர் எனப்படும் இரண்டு இயற்கை ஏரிகளும் இந்த சரணாலயத்தின் உள்ளே அமைந்துள்ளன. இவை இரண்டிலுமே படகுச்சவாரி செல்லும் வசதிகள் உண்டு. அது மட்டுமல்லாமல் ஒரு ஓய்வு இல்லமும் இந்த சரணாலயத்தின் உள்ளே அமைந்துள்ளது.