சோயாமி பாக் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த தயால்பாக் எனும் பெயருக்கு கருணையின் தோட்டம் என்பது பொருளாகும். ராதாசோயாமி மதப்பிரிவினரின் தலைமையகமாக இந்த பூங்கா வளாகம் இயங்குகிறது.
இந்த பிரிவின் 5 வது குருவாகிய ஹுசுர் சஹாப்ஜி மஹராஜ் என்பவரால் 1915ம் ஆண்டில் பசந்த் பஞ்சமி தினத்தில் ஒரு மல்பெரி மரத்தை நட்டு அடிக்கல் நாட்டப்பட்டு இந்த பூங்கா துவங்கப்பட்டிருக்கிறது.
ஆக்ராவிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இயற்கை வனப்பு கவிந்த சூழலின் நடுவே இந்த ராதாசோயாமி மதப்பிரிவினரின் இருப்பிடப்பூங்கா அமைந்திருக்கிறது. பக்தர்கள் மட்டுமல்லாது சுற்றுலாப்பயணிகளும் தினசரி அதிக அளவில் இந்த ஆன்மீக வளாகத்திற்கு வருகை தருகின்றனர்.
இந்த இருப்பிட வளாகம் அமைந்திருக்கும் இடம் ஒரு காலத்தின் மணற்குன்றுகள் நிரம்பிய பூமியாக இருந்திருக்கிறது. இருப்பினும் பக்தர்களின் ஒன்றுபட்ட முயற்சியில் இன்று ஒரு பசுமை வளாகமாக 1200 ஏக்கர் பரப்பளவில் இது உருவாகியிருக்கிறது.
110 அடி உயரத்தில் ஹிந்து கட்டிடக்கலை முறைப்படி உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கோயில் ஒன்றும் இவ்வளாகத்தில் உள்ளது. தாஜ் மஹாலுக்கு இணையாக இது பார்வையாளர்களை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.