மாமன்னர் அக்பரின் முதல் ராஜபுத்திர மனைவி இந்த மரியம் ஆவார். ஆஜ்மேர் என்று தற்போது அழைக்கப்படும் அப்போதைய அம்பேர் தேசத்து கச்வாஹா ராஜபுத்திர ராஜா பர்மல் என்பவரது மகள் இவர்.
அக்பர் மிகவும் விரும்பிய சலீம் என்ற மகனை இந்த மரியம் ராணி பெற்றபின்னர் இவருக்கு மரியம் உஸ்ஜமானி என்ற பட்டப்பெயரை அக்பர் அளித்துள்ளார். உலகை நேசிப்பவர் என்பது இப்பெயரின் பொருளாகும். அந்த குழந்தையான சலீம்தான் பிந்நாளில் நூருதீன் சலீம் ஜஹாங்கீர் என்ற பெயர் பெற்ற மன்னராக விளங்கினார்.
1622ம் இந்த மரியம் உஸ் ஜமானி எனும் ராணி இறந்தபின்னர் அவரது பெயர் இந்த அரண்மனைக்கு அவரது மகனான ஜஹாங்கீர் மன்னரால் சூட்டப்பட்டது. இந்த அரண்மனை ஜோதி நகரிலுள்ள தந்த்பூர் சாலையில் அக்பர் சமாதிக்கு அருகில் உள்ளது.
அந்தப்புர மகளிர் தங்கும் மாளிகையாக இந்த அரண்மனை பயன்பட்டிருக்கிறது. இதன் உள்ளேயே தனிப்பட்ட வீடு போன்ற அமைப்புகளும் ஒரு பொதுவான கூடமும் உள்ளன. இதன் வடபகுதியில் உள்ள ஒரு தோட்டப்பூங்காவோடு ஒரு இணைப்புவழி மூலம் இந்த அரண்மனை இணைக்கப்பட்டிருக்கிறது.