ஷாஜஹான் மன்னர் பலவந்தமாக தனது தந்தை ஜஹாங்கீரிடமிருந்து அரியணையை கைப்பற்ற முதன்முதலாக 1622ம் ஆண்டு முயன்றபோது அதில் அவர் தோல்வியடைந்தார். இருப்பினும் 1627ம் ஆண்டில் ஜஹாங்கீரின் மரணத்துக்குப்பின் ஷாஜஹான் அரியணை ஏறினார்.
இடிபர்கான் எனும் பெயருக்கு நம்பிக்கைக்குரியவர் என்பது பொருள். இந்த இடிபர்கான் ஜஹாங்கீர் மன்னரின் நம்பிக்கைக்குரியவராக அந்தப்புர பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருந்தார்.
1623ம் ஆண்டில் ஷாஜஹான் ஆக்ராவை கைப்பற்ற எடுத்த முயற்சிகளை இவர் எதிர்த்தார். இந்த விசுவாசத்தை பாராட்டு வகையில் ஜஹாங்கீர் இவருக்கு மும்தாஜ் கான் எனும் பட்டப்பெயரையும் அளித்துள்ளார்.
அப்போதைய வழக்கப்படி இந்த கீர்த்தி பெற்ற தளபதியான இடிபர்கான் தனக்கான கல்லறை மாளிகையை தான் உயிரோடிருக்கும்போதே அமைத்துக்கொண்டார். இது குரு கால் தால் எனும் பெரிய நீர்த்தேக்கத்துக்கு அருகே அமைந்திருக்கிறது.
இந்த கல்லறை அமைப்பு ஆரம்பத்தில் ஒரு மசூதியையும் அந்தப்புரத்தையும் சேர்ந்தே கொண்டிருந்தது. இதன் பெரும்பகுதி இங்கு இருப்புப்பாதை அமைக்கப்பட்டபோது அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது மசூதி மற்றும் கல்லறை அமைப்பு மட்டுமே மீதமுள்ளன.
இதன் மேல் மாடத்தில்12 தூண் அமைப்புகளை கொண்டிருப்பதால இந்த கல்லறைச்சின்னம் பரா கம்பா என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இடிபர்கானின் சமாதி ஒரு சதுர வடிவ கல்லறை கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பாறைக்கற்களால் எழுப்பப்பட்டுள்ள ஒரு வாயில் அமைப்பின் வழியாக இதன் உள்ளே செல்லலாம்.