ஆஜ்மேர் ராஜா பர்மல் காச்வாலா என்பவரின் மகளான மரியம் ஜமானி முகலாய மன்னர் அக்பரின் மனைவியாவார். இவர் சலீம் என்ற மகனைப்பெற்றபோது அக்பர் இவருக்கு இந்த மரியம் ஜமானி எனும் பட்டப்பெயரை வழங்கியுள்ளார்.
உலகை நேசிப்பவர் என்பது இப்பெயரின் பொருளாகும். அந்த சலீம்தான் பின்னாளின் ஜஹாங்கீர் என்று பெயர் பெற்ற அரசராக விளங்கினார்.
மரியம் ஜமானி 1623ம் ஆண்டில் மரணமடைந்தபோது ஜஹாங்கீர் அவருக்காக இந்த கல்லறை மாளிகையை எழுப்பினார். சிக்கந்த்ராவில் உள்ள அக்பரின் கல்லறை மாளிகைக்கு அருகிலேயே இது உருவாக்கப்பட்டிருக்கிறது. 1623ம் ஆண்டு தொடங்கி 1627ம் வருடத்திற்குள் நான்கு வருடங்களில் இது கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
சதுர வடிவிலான இந்த கல்லறை ஒரு தோட்டத்தின் நடுவே இரண்டு விசாலமான நடைக்கூடங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. மூடப்பட்ட கூரை அமைப்பு மற்றும் பெரிய விதான வளைவுகள் மற்றும் அவற்றை தாங்கும் குறுக்கு உத்தரங்கள் போன்ற கட்டுமான அமைப்போடு இந்த கல்லறை மாளிகை காட்சியளிக்கிறது.
செங்கல் மற்றும் சுண்ணாம்புக்கலவையால் இது கட்டப்பட்டிருக்கிறது. நான்கு சாத்ரி குடைமாட அமைப்புகளும் இதன் நான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
முகலாயர் கால கட்டிடக்கலையில் மாடக்கூரை இல்லாது அமைக்கப்பட்டிருக்கும் கல்லறை மாளிகைகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்த மரியம் ஜமானி கல்லறை சொல்லப்படுகிறது.