CEPT கேம்பஸ் என்று அழைக்கப்படும் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்நுட்ப மையம் பி.வி.ஜோஷி அவர்களால் 1962ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
தன்னாட்சி பெற்ற பல்கலைகழகமாக இயங்கும் இந்த மையத்தில் 1991ம் ஆண்டில் ஸ்ரீமதி கிருஷ்ணா சாஸ்திரியால் ஒரு இன்டீரியர் டிசைன் பயிற்சிப்பிரிவும் துவங்கப்பட்டிருக்கிறது.
இந்த கல்வி மையத்தில் பல்வேறு இளங்கலை, முதுகலை படிப்புகள் படைப்பாக்கத்திறன் சார்ந்த துறைகளில் வழங்கப்படுகின்றன. புகைப்படவியல், இசை, கைவினைத்திறன், மதம், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் போன்ற பாடங்கள் இங்கு போதிக்கப்படுகின்றன.
மற்ற கல்லூரிகளின் கற்பித்தல் முறைகள் மற்றும் பாடத்திட்டங்கள் போன்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அம்சங்களை இந்த CEPT கேம்பஸ் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.