ஹுசேன் ஜோஷி குஃபா என்பது தரையடித்தளத்தில் ஒரு பிரம்மாண்ட குகை போன்று அமைக்கப்பட்டிருக்கும் ஓவியக்காட்சிக்கூடமாகும். இது கஸ்தூரிபாய் லால்பாய் இன்ஸ்டிடியூட் இந்தோலஜி வளாகத்தின் உள்ளேயே அமைந்திருக்கிறது.
பிரபல ஓவியர் பி.வி.ஜோஷி மற்றும் உலகப்புகழ் பெற்ற ஓவியர் எம்.எஃப். ஹுசேன் ஆகியோர் இந்த புதுவிதமான முயற்சியை செயல்படுத்தியுள்ளனர். நவீன மற்றும் யதார்த்த பாணியில் இந்த குஃபா காட்சிக்கூடத்தின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதன் கூறைகள் ஒன்றிணைக்கப்பட்ட குமிழ் மாடங்கள் போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றன. அவற்றின் உட்புறத்தில் வண்ண ஓடுகளும் பொதிக்கப்பட்டுள்ளன. இந்த குஃபா அமைப்பின் உள்ளே வித்தியாசமான சூழலில் ஓவியங்களை பார்த்து ரசிக்கலாம்.
ஓவியக்கலை ரசிகர்கள் மற்றும் கலை விமரிசகர்கள் போன்றோர் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய அற்புத வளாகம் இது. அமைதியான சூழலைக்கொண்டிருப்பது இதன் கூடுதல் விசேஷம்.