அஹமதாபாத் நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் இந்த தொல் ஏரி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள 7 ச.கி.மீ பரப்பளவு 1988ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு புகலிட பறவைகள் ஏராளமாக வருகை தருகின்றன. கொக்குகள், நாரைகள், நீர் வாத்துகள், கரண்டி வாயன், செந்நாரை, விசிலடிச்சான், பெருங்கொக்கு, வெண்கொக்கு போன்ற 100 வகையான பறவையினங்கள் இங்கு காணப்படுகின்றன.
சிவப்பு கழுத்தும் நீண்ட கால்களையும் கொண்ட இந்திய சாரஸ் கொக்கு எனும் பறவையினம் இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. மழைக்காலம் முடிந்தபின்னர் நவம்பர் மாதம் பிப்ரவரி வரையான காலம் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்ய ஏற்றது.