அஹமத் நகரில் அமைந்துள்ள ஒரு வரலாற்று நினைவுச்சின்னம் இந்த பாக் ரௌஸா ஆகும். கோயில் தோட்டம் என்றும் அழைக்கப்படும் இந்த பாக் ரௌஸா அஹமத் நிஜாம் ஷா’வின் கல்லறையை கொண்டுள்ளது. அஹமத்நகரின் ஸ்தாபகர் என்று போற்றப்படும் இவர் 16ம் நூற்றாண்டின் துவத்தில் மரணமடைந்துள்ளார்.
வழவழப்பான கருங்கல்லால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நினைவுச்சின்னம் டெல்லி கேட்டுக்கு(வாசல்) அருகில் காணப்படுகிறது. இதன் குமிழ் கோபுரம் தங்கத்தால் ஆக்கப்பட்டு அதில் குரானின் புனித வாசகங்களுடன் காணப்படுகிறது.
நீங்கள் இந்த ஸ்தலத்துக்கு வருகை தரும்போது இங்குள்ள குலாம் அலி என்ற பெயரை உடைய அரச யானையின் சமாதியையும் பார்க்கலாம். இது 1565ல் விஜயநகர அரசருடன் நடந்த சண்டையின் போது இது உயிரிழந்ததாக அறியப்படுகிறது.
பாக் ரௌஸா ஸ்தலத்தை எளிதில் சாலை வழியே சென்றடையலாம். பயணிகளுக்கு டாக்ஸி மற்றும் பஸ் போன்ற போக்குவரத்து வசதிகள் கிடைக்கின்றன.