அஹமத் பாலிகாவின் உதவி மற்றும் ஆலோசனையில் பேரில் இந்த வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 1960 ம் ஆண்டில் மஹாராஷ்டிரா தினத்தின் போது தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு துவக்கத்தில் இரண்டு அறைகளை மட்டுமே கொண்டிருந்தது. தற்சயம் முழு கட்டமைப்புடன் கூடிய அருங்காட்சியகமாக வளர்ந்துள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் 12000 பழங்கால எழுத்துப்பிரதிகளும், 8000 புராதன நாணயங்களும், 50,000 வரலாற்று ஆவணங்களும் அவை தவிர பலவித வரலாற்று கலைப்பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.
1816ம் ஆண்டு லண்டனில் உருவாக்கப்பட்டுள்ள இந்திய வரைபடம் ஒன்றும், 66மீட்டர் நீளமுள்ள ஒரு ஜோதிடக்குறிப்பும் இங்குள்ள விசேஷ அம்சங்களாக கருதப்படுகிறது.
இந்த மியூசியம் தற்சமயம் மாவட்ட ஆட்சியர் அலுவலகித்திற்கு அருகில் உள்ள ஹுடாட்மா சௌக் எனும் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வியாழக்கிழமையை தவிர்த்து மற்ற வார நாட்களில் இந்த மியூசியம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்துள்ளது.