கல்யாண சாளுக்கிய கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ள இந்த சரந்திமாதா கோயில்கள் 11 மற்றும் 12ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள கல்வெட்டு குறிப்புகள் இவை 1120ம் ஆண்டுக் கட்டப்பட்டதாக அறிவிக்கின்றன.
மூன்று கோயில்கள் ஒரு பொதுப்பிரகாரத்தால் இணைக்கப்பட்ட ஒரு தொகுதியாக காணப்படும் இந்த கோயிலில் முன்புறம் ஒரு விதான அமைப்பும் உள்ளது.
இங்கு பயணிகள் இரண்டு ஜைன பசாதிகளைக் (கோயில்) காணலாம். இவை ஒவ்வொன்றிலும் 12 தீர்த்தங்கரர்கள் காணப்படுகின்றனர். சரந்திநாதர் ஆட்சியின்போது கட்டப்பட்டதாக அறியப்படுவதால் இது சரந்திநாதர் கோயில் என்று குறிப்பிடப்படுகிறது.