ஏஹோல் கிராமத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில் சிவனுக்காக கட்டப்பட்டுள்ளது. 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த ஹுச்சப்பய குடி ஒரு முகமண்டபம், ஒரு கருவறை மற்றும் சாளுக்கிய பாணியில் அமைந்த வளைவு கோபுரம் போன்றவற்றை கொண்டுள்ளது.
லாட்கான் கோயிலின் கட்டிடக்கலை பாணிக்கு முற்றிலும் மாறானதாக இதன் வடிவமைப்பு அமைந்துள்ளது. இந்த கோயிலின் உள்கூரைப்பகுதி திரிமூர்த்திகளின் சிற்பங்கள், நடாரஜரின் சிற்பங்கள் இவற்றோடு ஒரு 12 ம் நூற்றாண்டு கல்வெட்டுக்குறிப்பையும் கொண்டுள்ளது. நுட்பமான மற்றும் அழகான சிற்பக்குடைவுகள் கோயிலின் உள்ளே அதிகமாய் காணப்படுகின்றன.
இங்குள்ள பல பெரிய சதுர வடிவ தூண்களின் வெளிப்பகுதியில் அழகாய் பொறிக்கப்பட்ட ஜோடிகளின் உருவங்கள் காணப்படுகின்றன. கோயிலின் வெளிப்புறச்சுவற்றில் உள்ள மாடங்களில் நரசிம்மரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரசித்தமாக உள்ள இந்த ஹுச்சப்பய்ய குடி எனும் கோயிலும் மடமும் பயணிகளுக்கு நேரம் இருந்தால் ஏஹோலில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.