11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த ரச்சி குடி கோயில் திரிகூடாசல கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேற்குத்திசையை நோக்கி அமைந்துள்ள இந்த கோயில் ஒரு உயரமான மேடை அமைப்பின் மீது எழுப்பப்பட்டுள்ளது.
இந்த கோயிலில் மூன்று திசைகளை நோக்கி இருக்கும் மூன்று அறைகள் உள்ளன. இதன் வெளிச்சுவற்றில் உள்ள மாடங்களில் நடராஜர், கணபதி மற்றும் விஷ்ணு ஆகியோரின் சிலைகள் காணப்படுகின்றன.
இந்த கோயிலின் முன்புறத்தில் உயரமான மேடையொன்றில் நான்கு மையமான தூண்களால் அமைக்கப்பட்ட விதான மண்டபம் உள்ளது. இதன் மையத்தில் நந்தி சிலை கோயிலின் உள்ளே நோக்கும்படி அமைந்துள்ளது.
கோயில் முன் விதான கட்டமைப்பில் மூன்று புறமும் கஹாசனஸ் எனப்படும் சரிவு மாடமும் சதுரமான தூண்களும் சாய்வான விதானக்கூரையும் காணப்படுகின்றன. இதன் மூன்று வாயில் வழியாக கோயிலுக்குள் நுழையலாம். பிரகார வாசல் நுட்பமான கஜலட்சுமி சிற்பத்தைக்கொண்ட நிலைக்கல் சட்டத்தையும் மலர் அலங்கார வடிவமைப்பு மற்றும் ஜியோமிதி வடிவங்களைக்கொண்ட கதவுகளையும் பெற்றுள்ளது.
இந்த முழுக்கோயிலின் மாதிரி தத்ரூப வடிவம் வெளிச்சுவற்றில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. இது பயணிகளை பிரமிக்க வைக்கும் ஒரு அற்புதமான அம்சமாகும்.