ஏஹோல் வரும் பயணிகள் ராவண பாடியையும் பார்ப்பது அவசியம். இது ஏஹோல் பகுதியில் உள்ள பழையான குகைக்கோயிலாகும்.
செவ்வக வடிவத்தில் அமைந்துள்ள இந்த சிவனுக்கான கோயில் 6ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இந்தக் கோயிலில் இரண்டு மண்டபங்கள், சிவலிங்கம் மற்றும் கருவறை போன்றவை அமைந்துள்ளன.
செதுக்கப்பட்ட தூண்களைக்கொண்ட இந்தக் கோயில் கருவறை சைவமரபுப்பாணியில் ஒரு அறை மற்றும் மூன்று வாசல்களைக்கொண்டுள்ளது.தென்மேற்கை நோக்கியுள்ள இந்த கோயிலின் வாயிலின் மேல் இணையாக ஒரு உடைந்த உத்திரம் காணப்படுகிறது.
கோயிலின் இருபுறமும் உள்ள பள்ள அமைப்பில் தனியாக இரு சிறு கோயில்கள் அமைந்துள்ளன. இந்த உள் மற்றும் வெளிச்சுவற்றில் சிவனின் பலவிதமான நடன நிலை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சப்தமாத்ரிகா (ஏழு தாய்க்கடவுள்கள்) சிற்பங்களுக்கு மத்தியில் சிவனின் தாண்டவ சிற்பங்கள் அமைந்திருப்பது இந்த குகைக்கோயிலின் சிறப்பம்சமாகும்.