அப்துல்லா கான் சமாதி வெள்ளை சலவைக்கற்களால் உருவாக்கப்பட்ட அழகிய நினைவுச் சின்னமாகும். இதை தங்கள் தந்தையின் நினைவாக 1710-ஆம் ஆண்டு சையது சகோதரர்கள் கட்டியுள்ளனர்.
இந்த செவ்வக வடிவிலான சமாதி உயரமான தளத்தின் மீது நான்கு படிக்கட்டுகளுடன், அலங்கரிக்கப்பட்ட தோரணவாயிலுடனும், நான்கு அழகிய கோபுரங்களுடனும் காட்சியளிக்கும் எழிலை நாள் பூராவும் ரசித்துக்கொண்டிருக்கலாம். அப்துல்லா கான் சமாதியின் வடிவமைப்பு நேர்த்தியை முகாலயர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த உதாரணமாக கூறலாம். இந்தப் பகுதியில் மசூதி ஒன்று இருப்பதாக சமாதி அருகே காணப்படும் பெயர்ப்பலகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இதன் அருகில் அப்துல்லா கான் மனைவியின் சமாதியை தவிர வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை.