அஜ்மீர் நகரிலிருந்து 26 கி.மீ தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை 8ல் பேவார் செல்லும் வழியில் இந்த ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு 800 வருட வயது கொண்ட பழமையான அரிய மரவகைகள் காணப்படுகின்றன.
கல்பவிருக்ஷம் என்றழைக்கப்படும் இந்த மரங்கள் பக்தர்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்வதாக நம்பப்படுகிறது. இந்த விசேஷத்தின் காரணமாக ஏராளமான பக்தர் நாடெங்கிலுமிருந்தும் இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்கின்றனர். தங்கள் கோரிக்கை வேண்டுதல்களுடன் ஒரு நூலையும் மரத்தில் கட்டி பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.