சோலா கம்பா எனும் இந்த நினைவு மண்டபத்துக்கு அதன் கூரையைத்தாங்கும் 16 தூண்களின் காரணமாக அப்பெயர் வந்துள்ளது. இது ஔரங்கசீப் மன்னரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
தர்க்க ஷெரீப் சமாதிக்கு வெளியிலேயே உள்ள இது ‘ஷேய்க் ஆலா அல் தின்’ சமாதி என்றும் அறியப்பட்டுள்ளது. காஜா மொயின் – உத்- தின் சிஸ்தி தர்க்காவை நிர்வகித்த ஒரு ஞானியால் 4 வருடங்களில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதன் மைய அமைப்பு வெண்பளிங்குக்கற்களால் நிர்மாணிக்கப்பட்டு சுற்றிலும் நான்கு மெலிதான மினாரெட் கோபுரங்களை நான்கு மூலைகளிலும் கொண்டுள்ளது. மூன்று வளைவான விதான வளைவுகள் கட்டிடத்தின் மேற்கூரையோடு இணைக்கப்பட்டிருப்பது இதன் முக்கியமான கட்டிடக்கலை அம்சமாக குறிப்பிடப்படுகிறது.
கூரையுடன் கூடிய முன்முற்றத்தை கிழக்குப்பகுதியில் கொண்டிருக்கும் இந்த மசூதி இந்தியாவிலேயே பழமையான மசூதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் மைய அமைப்பு 1399 சதுர அடி கூரைப்பரப்பையும் முன்கூரை அமைப்பு 1001 சதுர அடி பரப்பையும் கொண்டுள்ளது.