டு-காங் அல்லது அசெம்ப்லி ஹால், அல்ச்சி மடம் வளாகத்தின் நடுவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த கட்டிடமான இது இந்த மடத்தில் அமைந்த பெரிய கட்டிடமாகும்.
அதனால் இங்குள்ள துறவிகள் பலதரப்பட்ட சடங்குகளையும் இந்த மண்டபத்தில் தான் நடத்துவார்கள். இந்த கட்டிடத்தில் 12 மற்றும் 13-ஆம் நூற்றாண்டில் கூடுதலாக சில இணைத்தல்களும் சேர்க்கப்பட்டன.
இந்த கோவிலின் நடை சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தரின் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இந்த கோவிலின் வெளிக்கதவில் மஹாகல் என்ற கல் ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது.
இது அழிக்கும் கடவுளான சிவபெருமானையும், சம்சாரா அல்லது சுழற்சியாக உள்ளவைகளை குறிக்கும் பாவசக்ரா அல்லது வாழ்கையின் சக்கரத்தையும் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருகிறது.
இக்கோவிலின் சுவர்களில் பஞ்ச் தத்கத்ஸ் வரையப்பட்டிருக்கும். வைரோசனா என்ற விண்ணக புத்தர் தான் இந்த கோவிலில் இருக்கும் மூல கடவுள். இந்த சிலையை சுற்றி ஆறு வகையான மண்டல்ஸ் அல்லது புத்த மத புனித கலைகளை கொண்டு பஞ்ச் தத்கத்ஸ் வரையப்பட்டிருக்கும்.
இந்த மண்டல்சை புத்தருடன் பல ஓவியங்களில் காண நேரிடலாம். இவைகள் தர்மாஸ், போதிசட்வாஸ் மற்றும் இதர புனிதர்களின் பாதுகாவலராக விளங்குகிறது.