600 ஆண்டுகள் பழமையான பாபா பார்ச்சி பஹதூர் தர்ஹா பல்வேறு மதங்கள் மற்றும் நம்பிக்கைகளையுடைய மக்கள் வந்து செல்லும் இடமாகும். இந்த புனிதத் தலத்தில் வணங்கி சென்றவர்களின் விருப்பங்கள் நிறைவேறும் என்பது பரவலான நம்பிக்கையாகும்.
இந்த நம்பிக்கையின் காரணமாகவே பல்வேறு மத மற்றும் இனத்தைச் சேர்ந்த மக்களும் இங்கு வந்து செல்கின்றனர். உண்மையில், இந்த புனிதத்தலம் மத ஒருமைப்பாட்டின் அடையாளமாக உள்ளது.