அலிகார் மாவட்டத்திலுள்ள நாக்லியா என்ற சிறிய கிராமம் சில வகை வன உயிர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருட்டாக உள்ள கிராமமாகும். கருப்பு மான்களை பாதுகாப்பதற்காக இந்த இடம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த பாதுகாப்பிடம் வன உயிரினங்களின் வசிப்பிடமாகவும், பாதுகாத்து வைத்திருக்கும் இடமாகவும் மற்றும் பராமரிக்கும் இடமாகவும் விளங்குகிறது.
இங்கிருக்கும் மக்கள் சாதாரணமாகவே உயர்ந்த கல்வி, பட்டங்களைப் பெற்றிருப்பது இந்த கிராமத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். இங்கிருக்கும் குடும்பங்களில் ஒருவரோ அல்லது அதற்கும் மேலானவரோ அரசு பணியில் இருப்பதால் அவர்கள் மிகவும் வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
அலிகார் நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவிலிருக்கும் இந்த கிராமம், போக்குவரத்து வசதிகளால் மிகவும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது.