அலாகாபாத் நகரத்தில் உள்ள பூங்காக்களில் மிகப்பெரியது இந்த ஆல்ஃப்ரெட் பார்க் எனப்படும் பூங்காவாகும். 133 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பரப்பில் இந்த பூங்கா அமைந்திருக்கிறது.
இது இளவரசர்ஆல்ஃப்ரட் அலாகாபாத் நகரத்துக்கு விஜயம் செய்த நிகழ்ச்சியின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் விக்டோரிய ராணி ஆகியோரின் பெரிய சிலைகளும் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
வெண்பளிங்குக்கல்லால் ஆன ஒரு விதானக்குடை அமைப்பு இங்கு விக்டோரியா ராணியின் பெயரால் அமைக்கப்பட்டிருக்கிறது. இது அக்காலத்திய ஆங்கிலேய கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டு காட்சியளிக்கிறது.
ஒழுங்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா சந்தடி நிறைந்த நகரிலிருந்து விலகி ஒரு மூலையில் சுற்றுலா பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒரு அம்சமாக அமைந்திருக்கிறது.
அமைதியான சூழலில் ஒரு வரலாற்றுக்கால ஸ்தலத்தை விரும்புகிறவர்களுக்கு இது மிகவும் பிடித்தமாக இருக்கும். பின்னாளில் இந்த் பூங்காவிற்கு சந்திர சேகர் ஆஸாத் என்ற சுதந்திர போராட்ட தலைவரின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.