அலாகாபாத் கோட்டை அக்பரால் கட்டப்பட்ட ஒரு பெரிய கோட்டையாகும். 1583ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை அக்காலத்தில் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் கலையம்சங்களுக்காக இந்த கோட்டை பிரசித்தமாக அறியப்படுகிறது.
தற்போது இந்த கோட்டை இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது. இதன் பெரும்பாலான பகுதிகளில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் ஒரு சில பகுதிகளுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அக்ஷயாவாத் எனும் அழியாத மரம் இந்த கோட்டைக்குள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த இடத்துக்கு விஜயம் செய்ய அனுமதி இல்லை. முடிந்தால் விசேச அனுமதியை அதிகாரிகளிடம் பெற்று அம்மரம் வீற்றிருக்கும் பகுதிக்கு செல்லலாம்.
10.6 மீட்டர் உயரத்தில் வழவழப்பான மணற்பாறையில் அமைக்கப்பட்டிருக்கும் அசோகத்தூண் ஒன்றும் இந்த கோட்டை வளாகத்தில் உள்ளது. இந்த தூண் 232ம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
வரலாற்றியல் நிபுணர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த தூணை ஒரு முக்கியமான வரலாற்று ஆவணமாக கருதுகின்றனர்.