அலாகாபாத் நகரத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஹனுமான் கோயில் ஹிந்துக்களின் விருப்பத்திற்குரிய வழிபாட்டுத்தலமாகும். 1787ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோயிலில் 20 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளது.
ஏனைய ஹிந்து கடவுளரின் சிலைகளும் இந்த கோயில்களில் காணப்படுகின்றன. காலப்போக்கில் இந்த கோயிலில் பல்வேறு புதுப்பிப்புகளும் செய்யப்பட்டிருக்கின்றன. கடைசியாக 1940ம் ஆண்டில் இது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
அலாகாபாத் நகரத்தின் பிரதான ரயில்நிலையத்திற்கு அருகிலேயே இந்த கோயில் அமைந்திருக்கிறது. எப்போதும் திறந்திருக்கும் இக்கோயில் அலாகாபாத் கோட்டைக்கு அருகே கங்கை நதியை ஒட்டியவாறு உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுப்பு நிகழும் சமயங்களில் இந்த கோயில் நீரில் மூழ்கி காணப்படுகிறது.