கிருஷ்ணாபுரம் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளதால் ‘கிருஷ்ணாபுரம் அரண்மனை’ என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை பல நூற்றாண்டுகளாக பல மாற்றங்களை தன்னுள்ளும், தன் சூழலிலும் கண்டுள்ளது.
18ம் நூற்றாண்டில் அன்றைய திருவாங்கூர் மஹாராஜாவான அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா இங்கிருந்த பழைய அரண்மனையை தரை மட்டமாக்கிவிட்டு ஒரே ஒரு தளத்தை மட்டுமே கொண்ட ஒரு எளிமையான அரண்மனை மாளிகையை உருவாக்கியுள்ளார்.
கேரள மண்ணின் பாரம்பரிய மரபுப்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சிதைவடையத் தொடங்கியிருந்த இந்த மாளிகையை கேரள தொல்லியல் துறை தன் பொறுப்பில் கொண்டு வந்து 1950ம் ஆண்டில் செப்பனிட்டு இப்போதுள்ள தோற்றத்துக்கு கொண்டுவந்துள்ளது.
தற்சமயம் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ள இந்த அரண்மனையின் வளாகத்தில் இதர கட்டிடங்களும் இடம் பெற்றுள்ளன. இவை மேற்கத்திய மற்றும் கிழக்குத்தேச கட்டிடக்கலை மரபுகள் கலந்து காட்சியளிக்கின்றன.
ஒரு மலையின் உச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையை சுற்றி புல்வெளிகள், நீரூற்றுகள் மற்றும் குளங்கள் ஆகியவை காணப்படுகின்றன. கேரள ராஜ பரம்பரையினரின் ரசனை, கலாச்சாரம் போன்றவற்றை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சுவரோவியங்கள், நாணயங்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவற்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.