அல்மோரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம்தான் இந்த பின்சர். இந்து மதக் கடவுளான சிவன் பெயர்தான் பின்சர். இதை பின்சர் தியோ என்றும் அழைப்பர்.
சந்த் அரசர்களின் கோடைக்காலத்தில் தங்கும் இடங்களில் தலைமை இடமாக இது இருந்திருக்கின்றது. பிரம்மாண்ட இமாலயத்தின் பின்னணியில் அமைந்துள்ள இவ்விடம் அல்மோராவின் பிரபலமான மலை வாசஸ்தலமாக இருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 2400 மீ உயரத்தில் உள்ள ஜந்தி தார் மலைகளின் மீது இவ்விடம் ஒய்யாரமாக காட்சியளிக்கின்றது.
இத்தலம் குமாவோனிவில் அமைந்துள்ள மிக உயர்ந்த மலை வாசஸ்தலம் ஆகும். இதன் அருகே இந்து மதக் கடவுளான சிவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.
பிரமாண்டமான இமாலய சிகரங்களையும், கேதார்நாத், ஷிவ்லிங், திரிசூல் மற்றும் நந்தா தேவி போன்ற இடங்களின் அழகிய காட்சிகளையும் இவ்விடத்திலிருந்து காணும் போது அழகோ அழகு.