காசர் தேவி கோவில், அல்மோராவிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவிலில் 1970 ஆம் ஆண்டிலிருந்து 1980 வரை நெதர்லாந்து நாட்டு துறவி ஒருவர் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகின்றது.
இதன் பின்பகுதியை அழகூட்டும் ஹவாபாக் பள்ளத்தாக்கு பார்த்த மாத்திரத்தில் எவரையும் அழகில் வீழ்த்தி விடும். ஸ்ரீ ராமகிர்ஷ்ணரின் மடத்தை நிறுவிய சிறப்புமிக்க இந்தியத் துறவியான சுவாமி விவேகானந்தர் இங்கு தவம் செய்ததாக கூறப்படுகின்றது.
காலிமத் நகரத்திலிருந்து இக்கோவிலை நடைப்பயணத்திலேயே எளிதாக அடையலாம். அல்மோராவிலிருந்து இக்கோவிலை அடைய பேருந்துகளையும், டாக்ஸிகளையும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.