நீல மலை பள்ளத்தாக்குகள் மற்றும் மெச்ஹுகவின் அடர்த்தியான பச்சை காடுகள் மெம்பா பழங்குடி மக்களின் இருப்பிடமாக உள்ளது. இந்த பிரபலமான சுற்றுலா தளம் அதன் கண்ணுக்கினிய அழகு மற்றும் இங்குள்ள புத்த மடாலயத்திற்காக அறியப்படுகிறது.
இங்குள்ள புத்த மடாலயம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. மேலும் இங்குள்ள நூலகத்தில் பல விலைமதிப்பற்ற புத்த மத சுவடிகள் மற்றும் புத்தகங்கள் பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த மடாலயம் அலாங் நகரத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அந்தப் பகுதி ஸம்டெம் யோங்சா எனப்படுகிறது. இது மிக பழமையான புத்த மடங்களில் ஒன்றாகும். மெச்ஹுகவில் பல்வேறு பண்டைய சிலைகள் காணப்படுகின்றன.
அழகான மெச்ஹுக ஏரி வளமான பசுமையால் சூழப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏரியானது மனதை மயக்கும் இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை நம் கண்களூக்கு விருந்தாக வழங்குகிறது.
இதைத் தவிர ஸியோம் ஆறும் இந்த அழகிய மெச்ஹுக பள்ளத்தாக்கின் வழியாக பாய்கிறது. மெச்ஹுக பள்ளத்தாக்கானது இந்திய சீன எல்லையில் இருந்து சுமார் 29 கீ.மீ தூரத்தில் உள்ளது.
இந்தப் பகுதியில் ஆதி பழங்குடி இனமான ராமோ மக்கள் வசிக்கின்றனர். இந்த இடத்திற்கு அருகில் உள்ள லிலபாரி விமான நிலையம் உள்ளது.