மஹாதேவா கோயில் என்ற பெயரிலும் அழைக்கப்படும் சிவன் கோயில் மார்த்தாண்ட வர்மா பாலத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலின் புதுமை என்னவென்றால் சிவலிங்கம் கோயிலுக்கு உள்ளே பிரதிஷ்டை செய்யப்படாமல் பரசுராமரால் பெரியார் நதிக்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதோடு ஆலுவா மணல் புறத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்த சிவலிங்கம் ராமபிரானால் வழிபடப்பட்டதாக புராணம் கூறுகிறது.
சிவன் கோயிலுக்கு அருகே ஸ்ரீ கிருஷ்ண-பலராம கோயில், ஐயப்பன் கோயில், அத்வைத ஆஷ்ரமம் போன்றவையும் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. இவைதவிர கட்டிடக் கலை அற்புதமாக கருதப்படும் ஆலுவா அரண்மனையும் சிவன் கோயிலுக்கு அருகாமையில்தான் அமைந்திருக்கிறது. இந்த சிவன் கோயிலில் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.