சௌபேர் பால் எனும் வீரத்தளபதியின் நினைவாக இந்த கட்டிடச்சின்னம் 1417ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தட்டையான மாடக்கூரையுடன் காட்சியளிக்கும் இந்த அமைப்பு நான்கு அற்புதமான வாயிற் பகுதிகளைக்கொண்டுள்ளது.
இது அல்வர் நகரத்தின் பரபரப்பான மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. திரிபோலியா நினைவுச்சின்னத்தின் வடபுறத்தில் முன்ஷி பஜார் எனும் மார்க்கெட் பகுதியும், தென்புறத்தில் மலக்கேரா பஜார் எனும் மார்க்கெட் பகுதியும், மேற்குப்புறத்தில் சரஃபா பஜாரும் அமைந்துள்ளன.
இந்த மார்க்கெட் பகுதிகள் யாவுமே தங்க ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் விற்பனைக்கு பிரசித்தி பெற்றுள்ளன. இந்த பிரம்மாண்டமான சமாதி மாடத்தின் கிழக்கு மூலையில் ஒரு மஹாதேவ்ஜி கோயிலும் உள்ளது. சௌபேர் பால் காலத்தைச்சேர்ந்த புராதன அரும்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள ஒரு மியூசியமும் இந்த நினைவுச்சின்ன வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது.