அமராவதி நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதியாக கருதப்படும் அமராவதி ஸ்தூபம் அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாகும். மனசைத்யா என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த ஸ்தூபம் கி.மு. 200-ஆம் நூற்றாண்டில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.
இந்த ஸ்தூபியில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் புத்தரின் வாழ்க்கையையும், அவருடைய போதனைகளையும் எடுத்துரைப்பதாக உள்ளன.
அமராவதி நகரம் சதவன்ஹனாஸ் மகாராஜாக்களின் ஆளுகைக்குள் வந்த போது அமராவதி ஸ்தூபம் சுண்ணாம்புக் கற்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டதுடன், புத்தரின் முழு உருவச் சிலைகள் வடிக்கப்பட்டன.
ஆனால் புத்த மதத்தின் வீழ்ச்சிக்கு பிறகு அமராவதி ஸ்தூபம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு மண்ணுள் புதையுண்டு போனது.
எனினும் கி.பி 1796-ஆம் ஆண்டு அமராவதி நகருக்கு வந்த பிரிட்டிஷ் இந்தியாவின் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்ஸி புதைந்து கிடந்த ஸ்தூபியை கண்டுபிடித்து தோண்டி எடுக்கச் செய்தார். அப்போது ஸ்தூபியுடன் முன்பு இணைந்திருந்த சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.