மானசரோவர் என்பது அம்பாஜி கோவிலுக்கு பின்னால் அமைந்துள்ள ஒரு பெரிய செவ்வக வடிவ குளம் ஆகும். இது 1584 மற்றும் 1594 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் அன்னையின் பரம பக்தரான ஸ்ரீ டபிஷன்கர் என்பவரால் கட்டப்பட்டது.
இந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் படிகள் உள்ளன. மேலும் இந்தக் குளத்தின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு கோயில்கள் காணப்படுகின்றன. இந்த இடத்திற்கு பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் புனித நீராட வருகை புரிகின்றனர்.