பாபநாசம் அணை 1942-ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சியில் உள்ள பொதிகை மலையில் கட்டப்பட்டது. இந்த அணை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பாபநாசம் அருவிக்கு மிக அருகாமையில் உள்ளது.
சிவபெருமானும் பார்வதி தேவியும் அகஸ்திய முனிவருக்கு காட்சி தந்து அருளிய இடமாக இது கருதப்படுவதால், இது ஒரு புண்ணிய ஸ்தலமாக திகழ்கிறது. இதற்கு மரியாதை செய்யும் விதமாக இங்கே நிறுவப்பட்டதுதான் அகஸ்தியர் கோயில்.
மலைகளாலும் மரங்களாலும் சூழ்ந்துள்ள இந்த அணையை பார்க்க ஒரு அழகிய ஓவியத்தை போலத்தான் இருக்கும். அதனாலேயே பல சுற்றுலாப் பயணிகளை இந்த இடம் ஈர்க்கிறது.