குருத்வாரா மாதா கௌலான் என்று அழைக்கப்படும் இந்த சீக்கிய கோயில் பிரசித்தமான தங்கக்கோயிலுக்கு பின்புறம் அமைந்திருக்கிறது. குரு ஹர்கோபிந்த்ஜி அவர்களை உபாசித்து வந்த பீபி கௌலான் என்பவரது நினைவாக கட்டப்பட்டிருக்கிறது.
சீக்கிய குருவை உபாசித்த குற்றத்திற்காக அந்த பெண்ணின் தந்தையான லாகூர் காஜி அவளுக்கு மரண தண்டனையை அளித்தார். இதை அறிந்த மியான் மீர்ஜி எனும் யோகி அந்த பெண்ணை மீட்டு வந்து குருஜியின் பாதுகாப்பில் சேர்ப்பித்தார். பின்னர் அந்த பெண் வாழ்நாள் முழுதும் ஆன்மீக தொண்டில் ஈடுபட்டார்.
எல்லா குருத்வாராக்களையும் போன்று இந்த குருத்வாரா மாதா கௌலான் கோயிலும் கௌல்சர் சரோவர் எனும் தீர்த்தக்குளத்தை ஒட்டி அமைந்திருக்கிறது.
6 வது சீக்கிய குருவான குரு ஹர்கோபிந்த்ஜி தங்கக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் முதலில் இந்த கௌல்சர் சரோவர் தீர்த்தத்தில் மூழ்கி குளித்து வர வேண்டும் என்பதாக கூறியுள்ளார்.
இந்த தீர்த்தக்குளத்தின் மேற்கு முனையில் மாதா கௌலான்ஜி’யின் சமாதியும் இடம் பெற்றுள்ளது. சீக்கிய மதத்தினரால் மதிக்கப்படும் முக்கியமான வழிபாட்டுத்தலமான இந்த மாதா கௌலான் குருத்வாராவை மறக்காமல் தரிசிப்பது சிறந்தது.