குருத்வாரா சந்தோக்ஸர் சாஹீப் என்றழைக்கப்படும் இது தங்கக்கோயில் வளாகத்தை ஒட்டியே அமைந்திருக்கிறது. இதன் தீர்த்தக்குளம் குரு அர்ஜன் தேவ்ஜி அவர்களால் வெட்டுவிக்கப்பட்ட ஐந்து குளங்களில் ஒன்றாகும்.
குரு ராம்தாஸ்ஜி காலத்தில் அவரது மாமனாரும் முந்தைய சீக்கிய குருவும் ஆன அமர்தாஸ்ஜி என்பவரது ஆலோசனைப்படி துவங்கப்பட்ட இந்த குளத்தின் கட்டுமான பணிகள் 1587-1589ம் ஆண்டுகளில் பாபா புத்தா அவர்களது உதவியுடன் முடிக்கப்பட்டது.
குரு ராம்தாஸ்ஜி இந்த தீர்த்தக்குளத்துக்கு சந்தோக்ஸர் சாஹீப் எனும் யோகியின் பெயரை அளித்துள்ளார். குளம் வெட்டும்போது இந்த யோகி அதே ஸ்தலத்தில் தியானத்தில் ஈடுபட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
சந்தகா என்றழைக்கப்பட்ட இந்த யோகியானவர் குருவின் மூலம் முக்தியடையவே தாம் காத்திருந்ததாக கூறி அதே இடத்தில் அவ்வாறே தன் இறுதி மூச்சை விட்டதாகவும் கூறப்படுகிறது. குருத்வாரா தாஹ்லி சாஹிப் என்றும் அழைக்கப்படும் இந்த குருத்வாரா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.