குருத்வாரா தம்தமா சாஹிப் எனப்படும் இந்த குருத்வாரா அம்ரித்ஸர் நகரிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு குருத்வாரா ஆகும். அம்ரித்ஸர் நகரிலிருந்து 200 கி.மீ தூரத்திலும் பதிண்டா எனும் இடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் இது அமைந்துள்ளது.
6-வது சீக்கிய குருவான குரு ஹர்கோபிந்த்ஜி 1705ம் ஆண்டில் இந்த ஸ்தலத்திற்கு விஜயம் செய்ததை குறிக்கும் விதமாக இந்த குருத்வாரா உருவாக்கப்பட்டிருக்கிறது.
இங்கு தங்கியிருந்த காலத்தில் குரு ஹர்கோபிந்த்ஜி சீக்கியர்களின் மத நம்பிக்கையை சோதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. பாபா டால் என்பவரை பாபா சிங் என்று ஞானஸ்நானம் செய்வித்ததாகவும் கூறப்படுகிறது.
நம்பிக்கையோடு விஜயம் செய்யும் பக்தர்களின் வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றும் சக்தியை இந்த குருத்வாரா ஸ்தலத்திற்கு அவர் அருளிச்சென்றதாக நம்பப்பட்டு வருகிறது.
நிஹாங் சிங் குடும்பத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த குருத்வாரா கல்சா பந்த் அமைப்பின் கீழ் வரும் நான்காவது பெரிய புனித பீடமாக கருதப்படுகிறது.