அம்ரித்ஸர் நகரில் உள்ள ரம்மியமான தோட்டபூங்காவான இந்த ராம் பாக் ஒரு காலத்தில் ராஜ வம்சத்தினரின் கோடைவாச மாளிகை அமைந்திருந்த இடமாகும். அம்மாளிகையே இன்று மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம் எனும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது. \
கம்பெனி கார்டன் என்றும் அழைக்கப்படும் இந்த பூங்காவிற்கு அம்ரித்ஸர் நகரை நிர்மாணித்த ஷீ ராம்தாஸ் ஜி அவர்களின் நினைவாக ராம்பாக் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
லாகூரில் உள்ள ஷாலிமார் தோட்டப்பூங்காவை போன்றே அமைந்துள்ள இந்த பூங்கா அம்ரித்ஸர் நகரில் தவறாமல் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும்.
கூம்பு வடிவ மரங்கள், மூலிகைத்தாவரங்கள் மற்றும் நீரூற்றுகள் பொருத்தப்பட்ட நீர்ப்பாதைகள் மற்றும் அதனுள் தங்க மீன்கள் போன்ற அம்சங்களை இந்த பூங்கா தன்னுள்ளே கொண்டுள்ளது.
இந்த பசுமையான வளாகத்தில் மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை சித்தரிக்கும் 3டி படக்காட்சிகள் விரியும் மின் ஒளித்திரை அமைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த பூங்காவுக்கான வாயில் பகுதி ஒரு பிரம்மாண்ட கட்டமைப்பாக கலையம்சத்துடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. பூங்காவின் ஒரு புறத்தில் மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் குதிரையில் வீற்றிருப்பது போன்ற தத்ரூப சிலையும் காணப்படுகிறது.