ஸ்ரீ ராம் திரத் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் அமைந்துள்ள ஸ்தலம் வால்மீகி முனிவர் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது. ராமபிரானுக்கான இந்த கோயில் அம்ரித்ஸர் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ளது.
புராணக்கதைகளின்படி வால்மீகி முனிவர் கணவரால் கைவிடப்பட்ட சீதாதேவிக்கு அடைக்கலம் அளித்ததாக சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தோடு தொடர்புடைய இந்த ஸ்ரீ ராம் திரத் கோயில் வளாகத்தில் பல்வேறு சிறு சன்னதிகளும் ஒரு பழமையான தீர்த்தக்குளமும் காணப்படுகின்றன.
ராமரின் புதவர்களான லவா மற்றும் குசா பிறந்ததாக கூறப்படும் ஒரு குடில் அமைப்பும் இந்த கோயிலில் அமைந்துள்ளது. இங்குள்ள பழமையான குளம் ஹனுமானால் வெட்டுவிக்கப்பட்டதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன.
வால்மீகி ரிஷி வசித்த குடில் மற்றும் சீதாதேவி குளித்த இடம் போன்றவையும் இந்த கோயில் வளாகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. நவம்பர் மாதத்தில் பௌர்ணமி நாளின்போது நான்கு நாள் திருவிழா ஒன்று இந்த கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.