ஜியாரத் பாபா ஹைதர் ரேஷி என்ற புகழ் பெற்ற மசூதி அனந்த்நாக் மாநகராட்சியில் உள்ள தண்டர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த மசூதி ஹர்ட ரேஷி அல்லது ரேஷி மொலு என்று அழைக்கப்படுகிறது.
இந்த மசூதியில் பாபா ஹைதர் ரேஷியின் சமாதி உள்ளது. அதோடு இந்த இடத்தில் பாபா ஹைதர் ரேஷியின் சமாதியுடன் அவருடைய 21 சிஷ்யர்களின் சமாதிகளையும் காணலாம்.
பல்வேறு மதங்களை கொண்ட மக்கள் இங்கு வந்து, ஜியாரத் பாபா ஹைதர் ரேஷியை வணங்கி விட்டுச் செல்வர். துறவியின் நினைவு நாளன்று பக்தர்கள் ஒரு வாரம் முழுவதும் மாமிசம் சாப்பிடுவதில்லை.
ஈரானிலிருந்து இந்த மசூதிக்கு ஷா ஹம்டன் என்ற துறவி வந்தபோது, இந்த மசூதி ஆரம்பகட்ட கட்டுமான பணியிலேயே இருந்தது என்று நம்பப்படுகிறது. இந்த மசூதியின் கீழ் தளம் ஷா ஹம்டனின் மகனான மிர் முகமது ஹம்டனியால் கி.பி.1397 -ல் கட்டப்பட்டது.
பிறகு பாபா தாவூத் கக்கி கி.பி.1579-ல் இரண்டாவது மாடியையும் கி.பி.1582-ல் மூன்றாவது மாடியையும் எழுப்பினார். அனந்த்நாக்கில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழிந்த பின், துறவி கக்கி கி.பி.1857-ல் மரணம் அடைந்தார்.