போரா குஹாலு என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்படும் போரா குகைகள் அனந்தகிரி குன்றின் ஒரு பகுதியாக இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த குகைகள் கடல் மட்டத்திலிருந்து 2313 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு, இந்தியாவின் மிகப்பெரிய குகைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது.
போரா குகைகளின் உள்ளே ஸ்பீலியோதெம் என்று அறியப்படும் கனிம படிவங்கள் அதிக அளவில் சிறிய மற்றும் பெரிய அளவுகளில் காணப்படுகின்றன. இதுதவிர இந்த குகைகளில் அழகிய வடிவங்களில் ஸ்டலக்மைட்ஸ் எனப்படும் கசிதுளிப்படிவுகள் சிலவற்றையும் நீங்கள் பார்க்கலாம்.
மேலும் பெரும்பாலும் சுண்ணாம்புக் கற்களாலேயே உருவாகியிருக்கும் போரா குகைகள் 80 மீட்டர் ஆழம் கொண்டதால், இந்தியாவின் ஆழம் மிகுந்த குகையாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக போரா குகைகள் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியல் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.