அரக்கு பள்ளத்தாக்கில் நிறுவப்பட்டிருக்கும் டிரைபல் மியூசியம் பழங்குடியினரின் வாழ்க்கை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த வட்டாரத்தில் வாழும் பழங்குடியினரின் அமைதியும், ஒற்றுமையும் மிக்க வாழ்வு முறையை சுற்றுலாப் பயணிகள் தெளிவாக தெரிந்து கொள்வார்கள்.
இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடி மக்களின் களிமண் சிலைகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதோடு பழங்குடி மக்கள் எவ்வாறு தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு இந்த சிலைகள் பேருதவியாக இருக்கும்.
டிரைபல் மியூசியத்தில் சிலைகள் உட்பட அனைத்து கைவினைப்பொருட்களும் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பழங்குடி மக்களின் சடங்குகள் போன்றவற்றோடு சேர்த்து அவர்களையும் நாம் ஆழமாக தெரிந்து கொள்ள பெருவாய்ப்பாக அமைந்திருக்கின்றன.
இங்கு நகைகள், வேட்டை ஆயுதங்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் வரலாற்று சிறப்புகள் ஏதுமில்லையென்றாலும் டிரைபல் மியூசியம் அரக்கு பள்ளத்தாக்கின் வரலாற்றுக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது.