குனிஹார் எனும் இந்த பள்ளத்தாக்கு அர்கீ நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. ஹத்கோட் என்றும் சோட்டி விளயாட் என்ற பெயரிலும் அழைக்கப்பட்ட இந்த இடத்துக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குனிஹார் என்று பெயரிட்டுள்ளார். இந்த பள்ளத்தாக்கு ஒரு மலர் மாலையைப்போன்ற வடிவத்துடன் காட்சியளிக்கிறது.
ஜம்முவை சேர்ந்த ரகுபன்சி ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த அபோஜ் தேவ் என்பவரால் 1154ம் ஆண்டு இந்த பள்ளத்தாக்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. குல்ஜா தேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ தேவி கோயில் மற்றும் தனோ தேவ்தாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ தனோ தேவ்தா கோயில் ஆகிய இரண்டையும் தரிசிக்கும் வாய்ப்பையும் இந்த பள்ளத்தாக்கு பகுதி பயணிகளுக்கு அளிக்கிறது. குனிஹார் தலாப் எனும் ஏரி இந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மற்றொரு சுற்றுலா அம்சமாகும்.