அர்கீ நகரத்தில் உள்ள முக்கியமான ஆன்மீகத்தலமான இந்த லட்சுமிநாராயண் கோயில் 1664-90 ம் ஆண்டுகளில் சத்தார் சிங் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயில் விஷ்ணு மற்றும் அவரது துணைவியார் லட்சுமிதேவிக்காக பத்தாம் நூற்றாண்டிலேயே எழுப்பப்பட்டிருக்கிறது.
ராஜா சஹில் வர்மன் என்பவரால் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயில் ஷிகார பாணி கட்டிடக்கலை அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சம்பா பகுதியிலேயே மிகப்பெரிய பழமையான கோயில் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
விமானம் அல்லது ஷிகரா, அந்தராலயா எனப்படும் சிறிய உள் நடையுடன் கூடிய கர்ப்பகிருகம் மற்றும் மண்டபம் போன்ற அமைப்பு ஆகியவை இந்த கோயிலில் அடங்கியுள்ளன.
விஷ்ணு பஹவானின் அவதாரமான நரசிம்மரும் இந்த கோயிலில் வீற்றுள்ளார். புராதன காலத்தில் இப்பகுதியை சூறையாடிய முஸ்லிம் படைகள் இக்கோயிலை சேதப்படுத்தாமல் விட்டுச்சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த கோயிலின் மரக்கூரை பனிப்பொழிவை தாங்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோயில் வளாகத்தில் ராதாகிருஷ்ணர், சந்திரகுப்தர் உருவாக்கிய சிவன் சன்னதி மற்றும் கௌரி சங்கர் சன்னதி போன்ற துணைக்கோயில்களும் இடம் பெற்றுள்ளன.