கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான இடத்தில் ஆலி செயற்கை ஏரி அமைந்திருக்கிறது. குறைவான பனிப்பொழிவு இருக்கும் நேரங்களில், பனிச்சறுக்கு செய்ய வசதியை ஏற்படுத்தும் பொருட்டாகவே அரசாங்கம் இந்த செயற்கை ஏரியை ஆலியில் உருவாக்கியது.
பனிச் சறுக்கு செய்யும் சரிவுகளையொட்டி இருக்கின்ற ஸ்னோகன்களின் வழியாக இந்த பாதைக்கு ஏரித்தண்ணீர் செலுத்தப்படுகிறது. சரியான பனிச்சறுக்கு பாதையை ஏற்படுத்தி, பனிச்சறுக்கு சீசனின் காலத்தை அதிகரிக்க இந்த ஏரி மிகவும் பயன்படுகிறது.