உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் நந்தபிரயாகை ஆகும். இந்த இடம் ஆலக்நந்தா மற்றும் நந்தாகினி ஆகிய ஆறுகள் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ளது.
பக்தர்கள் தங்களுடைய பாவங்களை கரைப்பதற்காக இந்த சங்கமத்தில் மூழ்கி எழுந்து செல்வார்கள். இந்து புராணங்களின் படி, நந்தபிரயாகை யாது வம்சத்தினரின் தலைநகரமாகும்.
புகழ் பெற்ற சுற்றுலாதலங்களான பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் செல்ல நுழைவாயிலாக இருக்கும் ஐந்து பிரயாகைகளில் ஒன்றாக நந்தபிரயாகை உள்ளது. விஷ்ணுபிரயாகை, கர்ணபிரயாகை, ருத்ரபிரயாகை மற்றும் தேவபிரயாகை ஆகியவை பிற பிரயாகைகளாகும்.
நந்தபிரயாகை அதன் அழகிய பனி படர்ந்த மலைகளுக்காக புகழ் பெற்ற இடமாகும். நந்தபிரயாகையில் ஆலக்நந்தா நதிக்கரையில் உள்ள கோபால்ஜி கோவிலுக்கு நாடு முழுவதுமிருந்து எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர்.