கடல் மட்டத்தில் இருந்து 234890 அடி உயரத்தில் உள்ள திரிசூல் சிகரம், ஆலியின் முக்கியான சுற்றுலா தலமாகும். சிவபெருமானின் கையில் இருக்கும் சூலாயுதத்தின் பெயராலேயே இந்த சிகரம் அழைக்கப்பட்டு வருகிறது.
பனிச்சறுக்கு செய்ய ஏற்ற சரிவுகளை கொண்டிருக்கும் இந்த இடம், இந்தோ-திபெத்திய காவல் படையினரின் பயிற்சி களமாகவும் விளங்குகிறது.
இந்த சிகரத்தின் அடிவாரத்தில் விசித்திரமான வகையில் ரூப்குந்த் ஏரி என்ற நீர்நிலை ஒன்றும் உள்ளது. இந்த ஏரியில் சுமார் 600 மனித மற்றும் குதிரைகளின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிகரத்தை கௌசானி மற்றும் பேதினி புக்யால் ஆகிய இடங்களிலிருந்தும் காண முடியும்.