பீகாரின் புகழ்பெற்ற, சிறந்த நகரங்களில் அவுரங்காபாத் ஒன்றாகும். பல குறிப்பிடத்தக்க வரலாற்று சம்பவங்கள் இங்கே நிகழ்ந்ததால் இந்நகர் புகழ்பெற்று விளங்குகிறது, காண்போரை மதிமயக்கச் செய்யும் அழகும், ஒளியும் நிறைந்த நகராகக் கருதப்படுகிறது.
இந்திய சுதந்திரப்போராட்டத்திலும் இந்நகர் பெரிய பங்காற்றியிருக்கிறது. ராஜேந்திர பிரசாத் பலநாட்கள் தங்கியிருந்த இந்த நகரம்தான் பீஹாரின் முன்னாள் முதல்வரும், சுதந்திரப்போராட்ட தியாகியுமான சத்யேந்திர நாராயண சிங்கின் சொந்த ஊராகும்.
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
புன்புன் போன்ற நதிகளுடன் ஏராளமான இயற்கைக் காட்சிகளைக் இந்நகரம் கொண்டிருக்கிறது. சல்ஹோ, துவாரபல் போன்ற மலைகள் உள்ள இங்கு, ஸ்வஸ்திக், கோமேதகம், கார்னெட் போன்ற விலைமதிப்புள்ள கற்கள் கிடைக்கின்றன.
மேலும் கோவில்கள், நினைவிடங்கள், மசூதிகள் என உள்ளூர் சுற்றுலாதளங்கள் கொண்ட இந்நகரத்தில் போக்குவரத்து வசதிகள் திறம்பட செய்யப்பட்டுள்ளதால் வருடாவருடம் இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே உள்ளது.
அவுரங்காபாதின் கலாச்சாரப் பெருமை மகதம் வரை நீள்கிறது. பேரரசர் அசோகர், சந்திரகுப்த மவுரியர் இவ்விடத்தை ஆட்சி செய்துள்ளனர், இங்கு மகதி, இந்தி ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.
காயாவில் இருந்து 1972ல் பிரிந்த இந்நகரம் பலவகையான கலாச்சாரங்களைக் கொண்டதாகும். நெல், கோதுமை, கரும்பு ஆகிய பயிர்கள் இங்கு சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயத்திற்காக நீர்பாசனம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் விளைச்சலுக்கு ஏற்றவைகளாக இருக்கின்றன.
ச்யவான், பிரிகு போன்ற துறவிகள் பல நாட்கள் இங்கு தங்கி தியானத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஷா ஷத்ருதீன் சூஃபி, சையட் முகமத் அல்கதரி பாக்தாதி, ஷா ஜலாலுதீன் கபிர் பானிபட்டி மற்றும் மொஹமட் சையட் ச்யால்கோட்டி ஆகிய இஸ்லாமிய துறவிகளும் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள்.
துமுஹனி மேளா என்ற விழா இங்கு கொண்டாடப்படுகிறது. ஓப்ரா என்ற கால்நடைகள் விற்கும் நிறுவனத்தால் இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. விரிப்புகள் செய்யும் தொழிலுக்காக புகழ்பெற இந்த ஊர் புன்புன் நதிக்கரையில் உள்ளதால் இந்துக்களுக்கும் புனித நகரமாக கருதப்படுகிறது,
அவுரங்காபாத் அடையும் வழிகள்
உள்நாட்டு பயணிகள் அவுரங்காபாத்திற்கு சுலபமாக பயணிக்கலாம். சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட இந்நகரத்தில் சிறப்பான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை எண்2 மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண்98 ஆகிய சாலைகளின் மூலம் இந்நகரம் இணைக்கப்பட்டுள்ளது.
அவுரங்காபாத் செல்ல சிறந்த பருவம்
அக்டோபரில் இருந்து மார்ச் வரை மிதமான வானிலை நிலவுவதால் அப்பருவத்தில் பயணிப்பது சிறப்பாக கருதப்படுகிறது.